» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அக்காள் கணவரை வெட்டிய வாலிபர் கைது!

சனி 13, ஏப்ரல் 2024 11:21:43 AM (IST)

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் அக்காள் கணவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் வேல்பாண்டி மகன் ராஜவேல் (44). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் வெள்ளைப்பட்டியில் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சம்பவத்தன்று மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவியின் தம்பியான பெஞ்சமின் வினோபா (21) என்பவர் அங்கு வந்து ராஜ வேலுவிடம் தகராறு செய்தாராம். 

மேலும் ஆத்திரம் அடைந்த அவர் ராஜவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜவேல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பெஞ்சமின் வினோபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory