» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நள்ளிரவில் பைக் எரிந்து சேதம் : போலீஸ் விசாரணை!!

வியாழன் 28, மார்ச் 2024 10:30:22 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்தவர் பாலசாமி மகன் சுடலை மாடசாமி (30). இவர் நேற்று முன்தினம் இரவு தேவி நகரில் உள்ள மாமானார் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தாராம். நள்ளிரவில் பைக் திடீரென எரிந்து சேதமானது. இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சுடலை மாடசாமி புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory