» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமமுக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்!

திங்கள் 4, மார்ச் 2024 3:11:42 PM (IST)



தூத்துக்குடியில், அமமுக மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெ.சுதா என்பவர் அக்கட்சியில் இருந்து விலகி இ்னறு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், தூத்துக்குடி மணிகண்டன், முகமது காலிப் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory