» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஷிப்பிங் கம்பெனி ஊழியர் வீட்டில் நகைகள், பணம் கொள்ளை: தூத்துக்குடியில் பரபரப்பு!!

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 11:33:25 AM (IST)

தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மில்லர் புரம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல பெருமாள் மகன் சின்ன கண்ணன் (60), ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு கிளம்பி சென்று சென்னையில் தங்கியிருந்து நேற்று உறவினர் வீட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இன்று காலை 06.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோ மற்றும் கபோர்டுகளில் இருந்த 15 பவுன் நகை, 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தனிவிரல்ரேகை பிரிவினர் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory