» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி இயங்கிய மதுபான பாருக்கு சீல்

சனி 27, மே 2023 8:22:56 AM (IST)

ஏரல் பஸ்நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய  மதுபான பாருக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பஸ்நிலையம் அருகில் இருந்து வாழவல்லான் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் ரோட்டில் மதுபான பார் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. 

அதன் பேரில் ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆறுமுகமங்கலம் வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி பிரபா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசு அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபான பாரை பூட்டி 'சீல்' வைத்தனர்.


மக்கள் கருத்து

A.SOLOMON RAJAமே 27, 2023 - 10:06:40 AM | Posted IP 172.7*****

அனுமதியின்றி மதுபான பாரை நடத்தியவர்க்கு என்ன தண்டனை வழங்கி உள்ளீர்கள்.சீல் வைத்தால் போதுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory