» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பார்ட் டைம் ஜாப் மெசேஜ் அனுப்பி ரூ.46 லட்சம் மோசடி - வாலிபர் கைது!

வியாழன் 25, மே 2023 10:24:22 AM (IST)



தூத்துக்குடியில் டெலிகிராம் ஆப் மூலம் பார்ட் டைம் ஜாப் என மெசேஜ் அனுப்பி அதன் மூலம் ரூ.46 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்த மாக்கன் மகன் தங்கதுரை (52) என்பவர் டெலிகிராம் ஆப் பயன்படுத்திய போது அதில் Part Time Job தேவையா என்ற விளம்பரம் Aashna (@Aashna_2mi) என்ற IDயில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த நபரிடம் பேசிய போது அவர்கள் FROSCH Travel Management Company நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனியன் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக அதன் சம்பந்தப்பட்ட Star Ratings கொடுப்பதன் மூலம் மேற்படி கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறியுள்ளனர். 

இதனையடுத்து முதலில் 1100, 1500 இலாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்து பின்பு அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை (Task) செய்யும் படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து தங்கதுரை அவர்கள் கூறிய வளைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு(Task) பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45,91,054/- பணத்தை தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

தங்கதுரை அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மேற்படி தங்கதுரையிடம் பணம் மோசடி செய்த திருநெல்வேலி மானூர், குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம் குமார் (31) என்பவரை அவரது வீட்டின் முன்பு வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்த ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.

இவ்வழக்கில் கைதான எலியாஸ் பிரேம் குமார் என்பவர் மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் வங்கிகளில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தியுள்ளதும், அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூபாய் 25 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இதுபோன்று பல்வேறு Like and Review Scam சைபர் குற்றங்கள் Telegram மற்றும் Whatsapp மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதனால் Like and Review Scam சம்மந்தமாக உங்களை முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு Youtube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பலமே 25, 2023 - 01:47:16 PM | Posted IP 172.7*****

நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory