» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடைக்கு சட்னி கொடுக்காததால் டீ கடை காரக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு

புதன் 24, மே 2023 11:43:44 AM (IST)

தூத்துக்குடியில் வடைக்கு சட்னி கொடுக்காததால் டீக்கடைக்காரரை அரிவாளல் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள சங்கர் காலணியில் வசிப்பவர் சுப்ரமணியன். இவரது மகன் உதயசங்கர் (26). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை டீக்கடையில் இருந்த போது பைக்கில் வந்த 3பேர் கொண்ட கும்பல் வடை சாப்பிட்டார்களாம். அப்போது வடைக்கு சட்னி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உதய சங்கர் சட்னி இல்லை என்றாராம். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தங்களது பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து உதயகுமாரை சரமாரியாக வெட்டினார்களாம். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த உதயகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இது சம்பந்தமாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்த 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து

ஆண்டமே 24, 2023 - 06:53:42 PM | Posted IP 162.1*****

பரம்பரை இருக்குமோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory