» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வடைக்கு சட்னி கொடுக்காததால் டீ கடை காரக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு
புதன் 24, மே 2023 11:43:44 AM (IST)
தூத்துக்குடியில் வடைக்கு சட்னி கொடுக்காததால் டீக்கடைக்காரரை அரிவாளல் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள சங்கர் காலணியில் வசிப்பவர் சுப்ரமணியன். இவரது மகன் உதயசங்கர் (26). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை டீக்கடையில் இருந்த போது பைக்கில் வந்த 3பேர் கொண்ட கும்பல் வடை சாப்பிட்டார்களாம். அப்போது வடைக்கு சட்னி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உதய சங்கர் சட்னி இல்லை என்றாராம். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தங்களது பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து உதயகுமாரை சரமாரியாக வெட்டினார்களாம். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த உதயகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இது சம்பந்தமாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்த 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையத்தின் அருகில் புதியசாலை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!
புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)

ஆண்டமே 24, 2023 - 06:53:42 PM | Posted IP 162.1*****