» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 97.36% தேர்ச்சி: தமிழகத்தில் 5வது இடம் பிடித்தது!

திங்கள் 8, மே 2023 11:29:39 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில்  97.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில், 10,498 மாணவிகள், 8,513 மாணவர்கள் என மொத்தம் 19ஆயிரத்து 11 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்கள் 8196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இது 96.28 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 5வது இடம் பிடித்துள்ளது. மாணவிகள் 10,313 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.24 சதவீதம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18ஆயிரத்து 509 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.36 ஆகும். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜூன் 19-ல் நடைபெறும் துணைத்தேர்வுக்கு வின்ணப்பித்து பங்கேற்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory