» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விசாரணைக்கு ஆஜராகாமல் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது!

சனி 3, டிசம்பர் 2022 8:32:15 AM (IST)

சாத்தான்குளம் அருகே 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு பன்னம்பாறையைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் மாடசாமி (40). இவா் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணைக்கு, மாடசாமி ஆஜராகாமல் இருந்து வந்தாா். 

இதனையடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ், தலைமைக் காவலா்கள் அந்தோணிக் குமாா், சின்னத்துரை கொண்ட தனிப்படையினா் அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியில் இருந்த மாடசாமியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory