» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசாரணைக்கு ஆஜராகாமல் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 3, டிசம்பர் 2022 8:32:15 AM (IST)
சாத்தான்குளம் அருகே 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு பன்னம்பாறையைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் மாடசாமி (40). இவா் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணைக்கு, மாடசாமி ஆஜராகாமல் இருந்து வந்தாா்.
இதனையடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ், தலைமைக் காவலா்கள் அந்தோணிக் குமாா், சின்னத்துரை கொண்ட தனிப்படையினா் அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியில் இருந்த மாடசாமியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்