» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை, வழிப்பறி வழக்குகளில் கைதான 5பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

வெள்ளி 2, டிசம்பர் 2022 8:14:05 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி,வழிப்பறி மற்றும் மோசடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 5பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

கடந்த 06.11.2022 அன்று கழுகுமலை சங்கரன்கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் உமா மகேஸ்வரன் (46) என்பவரை கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பபட்ட கழுகுலை குட்டிபேட்டை பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் கழுகுமலை தெற்கு ரத வீதியைச் சேர்ந்த மாடசாமி மகன் கனகராஜ் (38) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

கடந்த 07.11.2022 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்ப்டட வடக்கு இளந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (54) என்பரை நிலபிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் காளிப்பாண்டி (எ) காளி (28) மற்றும் கொம்பையா மகன் மாரிச்செல்வம் (29) ஆகியோரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

கடந்த 12.11.2022 அன்று ஸ்ரீவைகுண்;டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கத்தியால் தாக்கிய வழக்கில் தூத்துக்குடி 3வது மைல், இந்திராநகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் (எ) காடை காளியப்பன் (26) என்பவரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

கடந்த 16.10.2022 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி துறைமுக தேசிய நெடுஞ்சாலையில் வைத்து லாரி ஓட்டுரான அம்பாசமுத்திரம் கல்லிடைகுறிச்சியைச் சேர்ந்த தேவகணி மகன் சாமுவேல் ஜெயராஜ் (50) என்பவரை கத்தியால் தாக்கி பணம் பறித்த வழக்கில்    தூத்துக்குடி முருகேசன்நகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திக் (22) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

கடந்த 18.10.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு மோசடி  வழக்கில் விளாத்திகுளம் சங்கரலிங்கபுரம் ரகுராமபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கண்ணன் (48) என்பவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேற்கண்ட வழக்குகளில் கைதான கனகராஜ், காளிப்பாண்டி (எ) காளி, காளியப்பன் (எ) காடை காளியப்பன், 4. கார்த்திக் மற்றும் கண்ணன் ஆகிய 5பேரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 எதிரிகள் உட்பட 256 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory