» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கரோனா நிவாரண உதவிகள் : எஸ்பி வழங்கல்
வியாழன் 17, ஜூன் 2021 12:07:01 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ஓமன், ஐக்கிய அரபு அமீரக ரஜினி மக்கள் மன்றங்கள் சார்பில் இன்று தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான வீல் சேர்கள், ஸ்ட்ரெச்சர் மற்றும் பெட் ஷீட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நேரு மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் தவமணி, துணை செயலாளர்கள் தீரவாசகம், பெரியசாமிநாதன், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஜய் ஆனந்த், வழக்கறிஞர் அணி செயலாளர் செந்தில் ஆறுமுகம், வர்த்தக அணி செயலாளர் ஜெயக்கொடி, ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர் பொன்முருகன், ஓமன் மன்ற நிர்வாகி ரவீந்தீரன், வர்த்தக அணி துணை செயலாளர் ராமசாமி, துபாய் நிர்வாகி சக்திகுமார் மற்றும் நிர்வாகிகள் துரைராஜ், லட்சுமணன், ஜெயபால், சிவா, ரமேஷ் கார்த்திகேயன், விஜய் சாம்சன், கணேச மூர்த்தி, ராமர், மேகலா பழனி முருகன், அசோக் ராஜ், ஏகாம்பரம், மாரிமுத்து, நயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஜய் ஆனந்த் செய்திருந்தார்.
தமிழன்Jun 17, 2021 - 03:31:54 PM | Posted IP 108.1*****