» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆலையில் 17.80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி - ஆட்சியர் தகவல்
திங்கள் 14, ஜூன் 2021 8:49:10 PM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 17.80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும், 25 உருளை வாயு ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று (12.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 17.80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 5.52 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும், 10.50 மெட்ரிக் டன் கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கும், 1.78 மெட்ரிக் டன் தென்காசி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 175 NM3 (25 உருளை) ஆக்சிஸன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.