» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம்: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உறுதி

சனி 7, மார்ச் 2026 5:53:56 PM (IST)



ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அந்த நாட்டின் மீது கடந்த 28-ஆம் தேதி அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலுடன் இணைந்து நடத்திய இந்த ராணுவ அதிரடித் தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலையும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.

வளைகுடா பிராந்தியம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கி வரும் இந்தப் போர், நேற்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்துவிட்டது. எட்டாவது நாளாக இன்றும் இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. நீடித்து வரும் போரால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கத் தாக்குதலுக்குத் தளமாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாடுகளைத் தாக்குவோம் என்றும், அண்டை நாடுகளைத் தாக்கியதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory