» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி; 27 பேர் காயம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 11:45:04 AM (IST)

அண்டை நாடான நேபாளத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பொகாராவிலிருந்து (Pokhara) தலைநகர் காத்மாண்டுவிற்கு 44 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை, மத்திய நேபாளத்தின் தாடிங் மாவட்டப் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாகச் சாலையோரம் இருந்த திரிசூலி ஆற்றில் பாய்ந்தது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படையினரும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். எனினும், ஆற்றில் மூழ்கியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்: பேருந்து விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் சமீபத்திய ஆண்டுகளில் சாலை விபத்துகள் கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருகின்றன. 2024–25 நிதியாண்டில் மட்டும் நேபாளத்தில் 7,669 சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், அதில் 190 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)

பாகிஸ்தானில் பிரபல மதகுரு சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்
செவ்வாய் 5, மே 2026 4:23:41 PM (IST)

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 21 பேர் பலி; 61 பேர் படுகாயம்!
செவ்வாய் 5, மே 2026 11:14:44 AM (IST)

வெறும் காகிதப் புலிகள்: அமெரிக்காவின் முற்றுகை மிரட்டலுக்கு உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை!
சனி 2, மே 2026 11:42:48 AM (IST)

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 1, மே 2026 11:28:03 AM (IST)










