» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எப்ஸ்டீன் விவகாரம்: இங்கிலாந்து மன்னரின் சகோதரர் இளவரசர் ஆண்ட்ரூவிடம் விசாரணை!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:15:10 PM (IST)

மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியும், எலிசபெத் ராணியின் மூன்றாவது மகனுமான இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணையும் அதன்பின் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளன.
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய பாலியல் முறைகேடு வழக்கில் இளவரசர் ஆண்ட்ரூவின் பெயர் அடிபட்டது. கடத்தல் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. குறிப்பாக, இங்கிலாந்தின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய காலத்தில் அவர் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோதரர் ஆண்ட்ரூவை அனைத்து அரச பதவிகளில் இருந்தும் நீக்கினார். மேலும், அவர் அதிகாரப்பூர்வமாக அரண்மனையைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஆண்ட்ரூவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
மன்னர் சார்லஸின் அறிக்கை
தனது சகோதரர் மீதான புகார்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட மன்னர் சார்லஸ்: "ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் குறித்த செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. புகார்கள் மீது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும்," என்று தெரிவித்தார்.
விசாரணையும் தற்காலிக விடுவிப்பும்
காவல்துறை விசாரணைக்கு மன்னர் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இளவரசர் ஆண்ட்ரூ தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)

பாகிஸ்தானில் பிரபல மதகுரு சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்
செவ்வாய் 5, மே 2026 4:23:41 PM (IST)

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 21 பேர் பலி; 61 பேர் படுகாயம்!
செவ்வாய் 5, மே 2026 11:14:44 AM (IST)

வெறும் காகிதப் புலிகள்: அமெரிக்காவின் முற்றுகை மிரட்டலுக்கு உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை!
சனி 2, மே 2026 11:42:48 AM (IST)

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 1, மே 2026 11:28:03 AM (IST)










