» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை: தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை!
புதன் 26, மார்ச் 2025 12:10:16 PM (IST)
பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் மரியா பீபி. கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து மரியாவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே மரியா பீபியை குடும்பத்தினர் சேர்ந்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகின. இதனையடுத்து ஆணவக்கொலை செய்ததாக போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாயில் யூத மத குரு படுகொலை வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:53:15 AM (IST)

அமெரிக்காவில் பல மாகாணங்களை பந்தாடிய பனிப்புயல்: இயல்புவாழ்க்கை பாதிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:11:12 AM (IST)

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2ஆயிரத்தை கடந்தது : மீட்பு பணிகள் தீவிரம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:05:38 AM (IST)

ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் கார் வெடித்து சிதறியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
திங்கள் 31, மார்ச் 2025 8:26:34 AM (IST)

மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்: 704 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் காயம்!
சனி 29, மார்ச் 2025 11:16:32 AM (IST)

புதின் காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும்: ஜெலன்ஸ்கி சர்ச்சை கருத்து
வெள்ளி 28, மார்ச் 2025 12:00:47 PM (IST)
