» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் மோடி சரியான நடவடிக்கை எடுப்பார் : டிரம்ப் தகவல்!

செவ்வாய் 28, ஜனவரி 2025 5:31:58 PM (IST)



சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து அவர்களை நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். 

அதேவேளை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தொலைபேசி மூலம் இந்திய பிரதமர் மோடியிடம் உரையாடினார். இந்த உரையாடலின்போது அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார். இது தொடர்பாக இந்தியாவிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வெள்ளை மாளிகையில் மோடியை நான் சந்திக்க உள்ளேன்' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory