» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜோர்டானில் முதியோர் காப்பகத்தில் தீ; 6 பேர் பலி: 50 பேர் படுகாயம்!

சனி 14, டிசம்பர் 2024 12:46:30 PM (IST)



ஜோர்டான் தலைநகர் அம்மானில் முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட  தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு முதியோர் காப்பகம் செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். 

அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். எனவே சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்றொருபுறம் அந்த காப்பகத்தில் சிக்கிய முதியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory