» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்
செவ்வாய் 18, ஜூன் 2024 5:42:57 PM (IST)
அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய முயன்ற வழக்கு தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர், செக் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

ஆனால், இதை மத்திய அரசு மறுத்தது. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுஇருந்தது. வெளிநாடுகளில் உளவுப் பணிகளை மேற்கொள்ளும், 'ரா' அமைப்பைச் சேர்ந்த விக்ரம் யாதவ் என்ற அதிகாரி, இந்த கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பதாகவும், இதற்கு, ரா அமைப்பு தலைவர் சாவந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
ரா அதிகாரிக்காக, ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வசித்து வரும் நிகில் குப்தா, 52, இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாகவும், அதற்காக பணம் கொடுத்து ஆட்களை தயார் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து நிகில் குப்தா, செக் குடியரசில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று, நிகில் குப்தாவை நாடு கடத்தும் வழக்கு, செக் குடியரசு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அவரை நாடு கடத்த செக் குடியரசு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நிகில் குப்தா, அமெரிக்காவுக்கு நேற்று நாடு கடத்தப்பட்டதாகவும், புரூக்ளினில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்க இறக்குமதி இறைச்சியில் பாக்டீரியா பாதிப்பு? தடை விதிக்க சீனா முடிவு!!
புதன் 16, ஏப்ரல் 2025 12:46:01 PM (IST)

ஹமாசுக்கு ஆதவு: இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:52:32 AM (IST)

வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி வழக்கு : மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது!
திங்கள் 14, ஏப்ரல் 2025 12:01:43 PM (IST)
