» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் இடி மின்னலுடன் கனமழை; 15 பேர் பலி: 19 ஆயிரம் பேர் பாதிப்பு!

ஞாயிறு 2, ஜூன் 2024 8:40:26 PM (IST)

இலங்கையில் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சீரற்ற கால நிலையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன.

மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது.

மொத்தம் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 4000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளுக்காக படகுகளுடன் கூடிய 7 குழுக்களை இலங்கை ராணுவம் அனுப்பி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படை 3 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory