» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை மன்னாரில் அதானி மின் திட்டத்துக்கு நிலம் தர முடியாது: தமிழர்கள் போர்க்கொடி!
வியாழன் 9, மே 2024 10:24:39 AM (IST)
இலங்கை மன்னாரில் அதானி குழுமம் அமைக்கும் மின் திட்டத்துக்கு நிலம் தர முடியாது என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் கூறியதாவது: மன்னார் அதானி திட்டத்தால் எங்களுக்குப் பேரழிவு ஏற்படும் என பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். எங்களது எதிர்ப்பை மீறித்தான் மன்னாரில் அதானி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மன்னாரில் அதானி திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்களின் வரலாறும் பண்பாடும் அழிந்து போகும். எங்களின் வாழ்விடங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டு மக்கள் வாழ முடியாமல் வேறிடங்களுக்கு இடம் பெயர நேரிடும்.
மாணவர்கள் கல்வி, எதிர்காலம் அத்தனையுமே பாழாகும். எமது மன்னார் மண் வளம் நிர்மூலமாக்கப்பட்டு நாசமாகிவிடும். மன்னார் நிலத்தில் ஒரு துணைக் கூட அதானி குழுமத்துக்காக நாங்கள் வழங்கவே முடியாது. மன்னார் அதானி திட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்க போகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் அதானி திட்டத்தை மன்னார் மண்ணில் அனுமதிக்கவே முடியாது. இவ்வாறு சந்தியோகு மாக்கஸ் அடிகளார் கூறினார்.
மன்னார் பிரதேசத்தின் முக்கியத்துவம் என்ன?: உலக அளவில் பறவைகள் இடம் பெயரும் முக்கியமான 8 இடங்களில் மன்னார் பிரதேசமும் ஒன்று. உலகின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பறந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பறவைகள் மன்னார் வந்து செல்கின்றன. ஒரு ஆண்டுக்கு ஒன்றரை கோடி வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லக் கூடிய பிரதேசம் மன்னார்.
அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டும் பல லட்சக்கணக்கான பறவைகள் மன்னாரிலேயே தங்கிவிடும். உலக நாடுகளின் பறவைகளின் சொர்க்கம்தான் மன்னார். தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் பெரும் அங்கமாக இருக்கும் மன்னாரில் தமிழ் மீனவர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும் என்பது தமிழர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானைத் தாக்கினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:39:08 PM (IST)

அமெரிக்காவில் 3-வது முறையாக டிக் டாக் செயலி இயக்க அவகாசம் நீட்டிப்பு: டிரம்ப் உத்தரவு!
வெள்ளி 20, ஜூன் 2025 11:23:50 AM (IST)

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்!
வியாழன் 19, ஜூன் 2025 5:49:59 PM (IST)

ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:07:55 AM (IST)

அமெரிக்காவின் தலையீடு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: காமெனி எச்சரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 4:44:06 PM (IST)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் பலி!
புதன் 18, ஜூன் 2025 10:41:37 AM (IST)

சந்திரன்மே 9, 2024 - 10:56:59 AM | Posted IP 172.7*****