» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் : கார்கள் சரிந்து 24 பேர் பலி

வெள்ளி 3, மே 2024 12:37:54 PM (IST)



சீனாவில் மலைப்பாதையில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனங்கள் சரிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இரு வாரங்களாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து முடங்கியுள்ளது. முக்கிய நகரான மெய்சுவிலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெய்சுவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் பெரிய சத்தத்துடன் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. மலைப்பாதையில் உள்ள சாலை மற்றும் அதன் பக்கவாட்டில் ஏற்பட்ட 59 அடி பள்ளத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் உருண்டு விழுந்தன. அடுத்தடுத்து 18 கார்கள் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். 

சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த தேசிய நெடுஞ்சாலை துறையினர், பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டனர். அவர்களில் 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. மெய்சு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory