» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் மீது பதிலடி தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடாது: ஜோ பைடன் திட்டவட்டம்!
திங்கள் 15, ஏப்ரல் 2024 5:39:18 PM (IST)
"ஈரான் மீது எந்த விதமான பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடாது" என்று அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சில ஏவுகணைகள் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்தது. இதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டதே தவிர உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இஸ்ரேல் மீது முதன் முதலாக ஈரான் இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது.இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை தொடரும் எண்ணம் இல்லை என ஈரான் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் முகமது ஹூசைன் பகோரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகாரி கூறினார். இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ஈரான் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஈரான் நாட்டின் மீது எந்த விதமான பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும், பதில் நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தால் கவனத்துடன் இருக்குமாறும் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் கூறினார். ஜி -7 நாடுகளின் தலைவர்களுடன் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஜி 7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜோ பைடன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் இன்று குறைந்தது. இதையடுத்து இஸ்ரேலில் இன்று இயல்பு வாழ்க்கை திரும்பியது. பள்ளிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் இந்த பிரச்சனையை இரு நாடுகளும் தூதரகம் மூலம் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் டெல் அவிவ் நகருக்கு ஏர் - இந்தியா விமான சேவை தற்காலிமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்க இறக்குமதி இறைச்சியில் பாக்டீரியா பாதிப்பு? தடை விதிக்க சீனா முடிவு!!
புதன் 16, ஏப்ரல் 2025 12:46:01 PM (IST)

ஹமாசுக்கு ஆதவு: இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:52:32 AM (IST)

வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி வழக்கு : மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது!
திங்கள் 14, ஏப்ரல் 2025 12:01:43 PM (IST)
