» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்: உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ₹5.13 கோடி அபராதம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:20:07 PM (IST)

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சமையல் பெட்டிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையல் கூடங்களின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பு போன்ற புகார்கள் மீது ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட உரிமதாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தல் மற்றும் உணவு விநியோகம் செய்வோரைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வந்த புகார்களின் அடிப்படையில், நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது: ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் சுமார் 58 கோடி உணவுப் பொட்டலங்கள் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
இதில் உணவின் தரம் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை வெறும் 0.0008 சதவீதம் மட்டுமே. ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) மூலம் இயக்கப்படும் முக்கிய சமையல் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சமையல் முறைகள் நேரலையாகக் கண்காணிக்கப்படுகின்றன.
பயணிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க, பி.ஓ.எஸ் (POS) இயந்திரங்கள், யு.பி.ஐ (UPI) மற்றும் கியூ.ஆர் (QR) குறியீடு மூலம் டிஜிட்டல் முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. உணவுப் பொட்டலங்களின் தரம் மற்றும் எடையை உறுதி செய்யத் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







