» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)

கர்நாடகாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக தமிழக முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய்யிடம் தொலைபேசியில் பேசியதாகவும், கர்நாடகாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக அவர் தற்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும் முதல்வருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.செய்தியாளர்கள் சந்திப்பில் டி.கே. சிவக்குமார் பேசியதாவது: "நானும், தமிழக முதல்வர் விஜய்யும் அவரவர் மாநில மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். காவிரி விவகாரம் மற்றும் இரு மாநில நிலவரங்கள் குறித்து நாங்கள் இருவரும் தொலைபேசியில் பரஸ்பரம் விரிவாகப் பேசிக்கொண்டோம்.
அவர் வரும் 3-ஆம் தேதி கர்நாடகா வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக அவரது வருகை இன்னும் உறுதியாகவில்லை. கர்நாடகாவில் தற்போது சூழல் சரியாக இல்லை. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அவர் இங்கு வரும்போது போராட்டங்கள் எதுவும் நடைபெற்றால் அது சரியாக இருக்காது.
எங்கள் மாநிலத்திற்கு விருந்தினராக வருபவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே சிறிது காலம் காத்திருக்கலாம்; சூழல் சீரடைந்த பின்னர் நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவோம்."இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







