» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் புழக்கத்திற்கு வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: காகித நோட்டுகள் செல்லுமா?
செவ்வாய் 28, ஜூலை 2026 5:43:22 PM (IST)

இந்தியாவில் சோதனை முறையில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புடைய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகமான காலம் தொட்டுத் தாள்களால் ஆன காகித நோட்டுகளையே பயன்பாட்டில் வைத்துள்ளோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதல்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை தலா 100 கோடி எண்ணிக்கையில் அச்சிட்டு வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
காகித நோட்டுகளுடன் ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் நோட்டுகள் எளிதில் சேதமடையாது என்பதோடு, அதிக காலம் உழைக்கக்கூடியவை. இதன் மூலம் அடிக்கடி பழைய அல்லது சேதமடைந்த நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை அச்சிடும் செலவு மற்றும் சிரமங்கள் கணிசமாகக் குறையும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகள் திரும்பப் பெறப்படாது என்றும், பிளாஸ்டிக் மற்றும் காகித நோட்டுகள் ஆகிய இரண்டுமே தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
காகித நோட்டுகளை முழுமையாகப் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றுவதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், முதற்கட்டச் சோதனை முயற்சியின் வெற்றிக்குப் பிறகே கூடுதல் பிளாஸ்டிக் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







