» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்: முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:54:10 PM (IST)

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கருங்கல் பாறைகள் மற்றும் ஜல்லிக்கற்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்குச் கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதியிட்ட அரசாணை (எண்: 306) மூலம், மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் கருங்கல் பாறைகள் மற்றும் ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
இதன் காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு வரப்படும் கருங்கல் மற்றும் ஜல்லி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய்க்கு, கேரள முதல்வர் வி.டி. சதீசன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "கேரளாவில் நடைபெறும் பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான தரமான கற்களுக்குத் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களே நீண்டகாலமாக முக்கிய ஆதாரமாக விளங்கி வருகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உள்கட்டமைப்புப் பணிகள் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிராந்திய இணைப்பிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மற்றும் வல்லார்படம் கன்டெய்னர் முனையத்திற்குத் தடையற்ற இணைப்பை வழங்க இச்சாலைகள் அவசியமாகும்.
தமிழக அரசின் கொள்கை நோக்கங்களை முழுமையாக மதிக்கும் அதேவேளையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு சமச்சீரான அணுகுமுறையை உருவாக்க முடியும் என நம்புகிறேன். எனவே, கேரளாவில் நடைபெறும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் தடையின்றிச் செல்லத் தகுந்த தளர்வுகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







