» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடும் தாக்கு!
செவ்வாய் 28, ஜூலை 2026 10:54:59 AM (IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்ததாவது: "ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளிடம் விற்கப்பட்டவர்; அவர் அந்நிய சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார். அவர்களை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக அந்நிய நாட்டின் அமைப்புகள் உள்ளன. காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவருக்கு அந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.கடந்த 2004 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் ராகுல் காந்தி பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால், அவருடைய பயணங்கள் குறித்த எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. அவர் வெளிநாடுகளுக்குச் சென்று யாரைச் சந்திக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது. அவருடைய வெளிநாட்டுப் பயணங்களில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை."
ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்த நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் கூறினார்.
ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், அவரது வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் குறித்தும் பாஜக தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







