» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் அமைவதைத் தடுக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:47:39 PM (IST)
தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவதைத் தடுக்க வேண்டாம் என்றும், நிலங்களை ஒதுக்குவது குறித்து விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது, உயர்நிலையில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதால் 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நிலங்களைக் கண்டறிவது குறித்துத் தெரிவிக்க 3 வார கால அவகாசம் மட்டும் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக, ஹிந்தி மொழியைக் காரணம் காட்டித் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை நிறுவ மறுப்பதாகவும், சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் செயல்படும் நிலையில் நவோதயா பள்ளிகளை மட்டும் எதிர்ப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது. இதைக் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், தமிழ்நாட்டில் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை, ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறார்கள் என விளக்கமளித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, மற்ற மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் செயல்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நிலம் கண்டறிந்து வழங்க மறுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியது. மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமன்றி வேறு மொழிகளையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகும்.
அதேவேளையில், மும்மொழிக் கொள்கையை 6-ஆம் வகுப்பு முதல் தொடங்கி 9-ஆம் வகுப்பிற்குள் முடித்துவிட வேண்டும் என்றும், 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையைப் புகுத்துவது மாணவர்களுக்குப் பணிச்சுமையை அளிக்கும் என்றும் நீதிபதிகள் தங்களது அவதானிப்புகளைப் பதிவு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)









