» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலுங்கானாவில் சிறுமி உட்பட 6 பேர் கொலை வழக்கு: போக்சோ குற்றவாளி தற்கொலை!
செவ்வாய் 14, ஜூலை 2026 11:32:49 AM (IST)

தெலுங்கானாவில் தனது குடும்பத்தினர் மற்றும் சிறுமி உட்பட 6 பேரைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி ராஜ்குமார், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி சிறையிலிருந்த இவர், அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 10 அன்று தனது மனைவி, இரு மகன்கள் மற்றும் தான் சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த 17 வயதுச் சிறுமி உட்பட மொத்தம் 6 பேரை ராஜ்குமார் படுகொலை செய்துள்ளார்.
இக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான ராஜ்குமாரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர்.இந்நிலையில், கொத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றினர்.
அப்போது அவரது உடலின் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரைக் கொலை செய்த குற்ற உணர்வு அல்லது காவல்துறையினரிடம் சிக்குவதைத் தவிர்க்கும் நோக்கில் ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்துக் கொத்தூர் காவல்துறையினர் மரண விசாரணை வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







