» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரிவினைவாதிகளைப் புகழ்ந்து புத்தகம் வெளியீடு: 3 பதிப்பாளர்கள் அதிரடி கைது!
திங்கள் 13, ஜூலை 2026 12:07:20 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் புத்தகம் அச்சிட்டுப் புழக்கத்தில் விட்ட குற்றச்சாட்டில் 3 பதிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ‘லெஜண்ட்ஸ் அண்ட் பெர்சனாலிட்டிஸ் ஆஃப் ஜம்மு அண்ட் காஷ்மீர்’ (Legends and Personalities of Jammu and Kashmir) என்ற புத்தகம் வெளியானது. இப் புத்தகத்தில் சையத் அலி ஷா கிலானி, மஸ்ரத் ஆலம் மற்றும் மிர்வைஸ் உமர் ஃபரூக் உள்ளிட்ட பிரிவினைவாதிகளை ஜம்மு காஷ்மீரின் ‘சிறந்த ஆளுமைகள்’ என்று விவரித்துள்ளதுடன், தீவிரவாதக் கோட்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இவ் விவகாரம் தொடர்பாக ஜம்முவின் உளவுத்துறை பிரிவு (சிஐஜெ) அதிகாரிகள் டெல்லி மற்றும் ஜம்முவில் உள்ள பதிப்பகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். புத்தகத்தின் அச்சிடுதல், விநியோகம் மற்றும் சப்ளை தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே, விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட 3 பதிப்பாளர்கள் முறைப்படி கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் இருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜம்முவைச் சேர்ந்தவர். இதில் டெல்லியைச் சேர்ந்த பதிப்பாளர் ஒருவர், வெளியீடு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை அழித்து ஆதாரங்களை மறைக்க முயன்ற போதும், புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை நடத்தி முக்கியத் தரவுகளை வெற்றிகரமாக மீட்டெடுத்தனர்.
இப் புத்தகத்தை வெளியிடுதல், அச்சிடுதல் மற்றும் விளம்பரப்படுத்துதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் கல்வித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான சந்தோஷ் மீனா என்பவரிடம் விசாரணை நடத்தச் சிஐஜெ குழு ராஜஸ்தான் சென்றுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியரான ஹிலால் அகமதுவை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







