» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாலியல் புகார் அளித்த சிறுமி உட்பட 6 பேர் கொடூர கொலை: போக்சோ குற்றவாளி வெறிச்செயல்!
சனி 11, ஜூலை 2026 11:41:29 AM (IST)
ஹைதராபாத் ஷபாத் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில், போக்சோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த விவசாயி ஒருவர், தன் மீது பாலியல் புகார் அளித்த 16 வயது சிறுமி, அவரது குடும்பத்தினர் 2 பேர், தனது மனைவி மற்றும் 2 கைக்குழந்தைகள் உட்பட 6 பேரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
கொலைக்குற்றவாளியான விவசாயி மீது கடந்த மே மாதம் 16 வயது சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்தனர். இப் புகாரில் கைதாகி சிறையிலிருந்த அவர் அண்மையில் பிணையில் வெளியே வந்துள்ளார். தன் மீது புகார் அளித்த குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்ட அவர், நள்ளிரவில் சிறுமியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.
கதவைத் திறந்த சிறுமியின் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த 60 வயது பாட்டியையும் குத்திக் கொலை செய்துள்ளார். எனினும், அதே வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது சகோதரியை அவர் எதுவும் செய்யவில்லை. பின்னர், 16 வயது சிறுமியைத் தனது காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, கிராமத்தின் அருகிலுள்ள குளத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை நீரில் வீசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இரவு 11:21 மணி அளவில் தனது சொந்த வீட்டுக்குத் திரும்பிய அவர், தனது 31 வயது மனைவி, 4 வயது மற்றும் 18 மாதங்களே ஆன தனது இரண்டு மகன்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக் கொலைகளைச் செய்து முடித்த பின், தனது தந்தைக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு காரில் தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், 6 பேரின் உடல்களையும் கைப்பற்றிக் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய கொலைக் குற்றவாளியைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







