» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பஹல்காமில் கடந்த ஆண்டு இதேநாளில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவில் வாழும் குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். இந்த துக்கத்தில் நாடு ஒன்றாக நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றிபெறாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பதவி விலக மறுத்த மமதா: சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வியாழன் 7, மே 2026 9:00:04 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: வீரர்களை தேசம் வணங்குகிறது - ராஜ்நாத் சிங் பெருமிதம்!
வியாழன் 7, மே 2026 4:48:02 PM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து: அவமதித்தால் 3 ஆண்டு சிறை!
வியாழன் 7, மே 2026 11:56:11 AM (IST)

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட மத்திய அரசு மீண்டும் கெடு: புதிய அரசுக்கு காத்திருக்கும் முதல் சவால்!
வியாழன் 7, மே 2026 10:22:12 AM (IST)

விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றவர்கள் மீதே கார் மோதி விபத்து - 8பேர் உயிரிழப்பு!
புதன் 6, மே 2026 11:28:44 AM (IST)

உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதன் 6, மே 2026 11:20:55 AM (IST)










