» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடி குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

வெள்ளி 27, மார்ச் 2026 10:49:35 AM (IST)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

சர்வதேச நெருக்கடியால் உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்வதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த முக்கிய முடிவை மத்திய நிதியமைச்சகம் எடுத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.13 ஆக இருந்த வரி, தற்போது ரூ.3 ஆகக் குறைந்துள்ளது. டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டு, பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் உள்ளிட்ட புவிசார் அரசியல் பதற்றங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுவதைத் தவிர்க்க இந்த வரி குறைப்பு உதவும்.

எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரி குறைப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு குறையக்கூடும், இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சாமானிய மக்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெருமளவு உதவவும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory