» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடிப்பழக்கத்தால் பாதிப்பு: தந்தைக்குத் கல்லீரலைத் தானமாக வழங்கி உயிர் கொடுத்த மகள்!
செவ்வாய் 17, மார்ச் 2026 11:34:53 AM (IST)
கர்நாடகத்தில் குடிப்பழக்கத்தால் கல்லீரல் செயலிழந்த நிலையில் இருந்த தந்தைக்கு, அவரது 25 வயது மகள் கல்லீரல் தானம் செய்து உயிர் காத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஜகலூர் பகுதியைச் சேர்ந்த அஜ்ஜப்பா (50), வேளாண்துறை ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தாவணகெரேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவாகும் என்றும் தெரிவித்தனர்.
தனியார் நிறுவன ஊழியரான அவரது மகள் சந்தனா (25), தன் தந்தையைக் காப்பாற்ற எத்தகைய தியாகத்திற்கும் துணிந்தார். அறுவை சிகிச்சைக்குத் தேவையான பெரும் தொகையைத் திரட்டியதுடன், தனது கல்லீரலையே தானமாக வழங்க முன்வந்தார். இதையடுத்து, மருத்துவர்கள் சந்தனாவின் கல்லீரலில் 40 முதல் 60 சதவீதப் பகுதியை அகற்றி, வெற்றிகரமாக அஜ்ஜப்பாவிற்குப் பொருத்தினர்.
தற்போது அஜ்ஜப்பா உடல்நலம் தேறி வரும் நிலையில், தந்தையின் உயிரைக் காப்பாற்றத் துணிச்சலுடன் முடிவெடுத்த சந்தனாவிற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். "பெற்றோரைக் காப்பதில் மகள்கள் சளைத்தவர்கள் அல்ல" என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வராக்கடன் வெறும் 2% தான்: முத்ரா திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
புதன் 18, மார்ச் 2026 12:08:12 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: செந்தில் பாலாஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை!
புதன் 18, மார்ச் 2026 8:24:38 AM (IST)

மேற்கு வங்கம், கேரளத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:54:50 PM (IST)

ஒரே நாளில் டெலிவரி: அஞ்சல் துறை சார்பில் புதிய சேவை இன்று அறிமுகம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:13:32 PM (IST)

அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
செவ்வாய் 17, மார்ச் 2026 11:46:00 AM (IST)

கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி: அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
செவ்வாய் 17, மார்ச் 2026 8:44:19 AM (IST)









IndianMar 17, 2026 - 04:09:17 PM | Posted IP 104.2*****