» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறி; விவாதிக்க கார்கே வலியுறுத்தல்!
திங்கள் 9, மார்ச் 2026 5:14:50 PM (IST)
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் கூட்டுத் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களும் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கவலை தெரிவித்துள்ளன.மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போதைய சூழலில் விநியோகச் சங்கிலி அறுந்துள்ளதால், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதன் நேரடிப் பாதிப்பாக, இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்விற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
இந்த மோதல் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நேரடியாகப் பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் மாயமாகியுள்ளதாகவும், சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வருகின்றன.
வளைகுடா நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 51 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி இந்தியாவிற்கு வருகிறது. போர் நீடித்தால் இது முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
இந்த இக்கட்டான சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் குறித்தும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் தாமாகவே முன்வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயியின் மகளின் திருமணத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு: கிராம மக்கள் நெகிழ்ச்சி
செவ்வாய் 10, மார்ச் 2026 5:44:52 PM (IST)

எரிவாயு தட்டுப்பாடு: மும்பை, பெங்களூருவில் உணவகங்கள் மூடல் - பொதுமக்கள் அதிர்ச்சி!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:37:46 PM (IST)

8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை: மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:50:27 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்: பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:25:37 PM (IST)

குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை செயலர் உத்தரவு
திங்கள் 9, மார்ச் 2026 12:46:02 PM (IST)

டிசம்பருக்குள் ஹைதராபாத் டீசல் பேருந்துகள் இல்லாத நகரமாகும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி
திங்கள் 9, மார்ச் 2026 10:54:47 AM (IST)









srinivasanMar 9, 2026 - 05:46:54 PM | Posted IP 162.1*****