» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உடல் உறுப்புகளை தானத்திற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம்: டாக்டர்கள் சாதனை!

திங்கள் 10, நவம்பர் 2025 3:29:53 PM (IST)



டெல்​லி​யில் உறுப்​பு​களை தானம் செய்​வதற்​காக இறந்த பெண்​ணின் உடலில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர்.

டெல்லி துவாரகா பகு​தியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்​பியல் கோளாறு காரண​மாக பக்​க​வாதம் ஏற்​பட்டு படுத்த படுக்​கை​யாக இருந்​தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்து துவார​கா​வின் எச்​சிஎம்​சிடி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் கீதாவை சேர்த்​தனர். அங்கு அவருடைய உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது. அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப்​பில்லை என்ற நிலை ஏற்​பட்​டது. இதையடுத்து வென்​டிலேட்​டர் போன்ற உயிர்க் காக்​கும் கருவி​கள் உதவி​யுடன் கீதாவை வைத்​திருக்க அவரது குடும்​பத்​தினர் விரும்​ப​வில்​லை. பின்​னர் நவம்​பர் 6-ம் தேதி இரவு கீதா உயி​ரிழந்​தார்.

ஆனால், தனது உறுப்​பு​களை தானம் செய்ய வேண்​டும் என்று கீதா கடைசி ஆசையை தெரி​வித்​திருந்​தார். அதன்​படி, அவரது உறுப்​பு​களை தானம் அளிக்க முடி​வெடுக்​கப்​பட்​டது. இதையடுத்​து, கீதா​வின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை​யின்போது மருத்​து​வர் குழு​வினர் மிக​வும் சிக்​கலான மற்​றும் அரி​தான செயலை செய்​தனர். கீதா​வின் வயிற்​றுப் பகு​தி​யில் உள்ள உறுப்​பு​களை எடுத்து தானம் செய்​வதற்​காக, அந்​தப் பகு​தி​யில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்​தனர். இதை நார்​மோதெர்​மல் ரீஜினல் பர்​பியூஷன் (என்​ஆர்​பி) செயல்​முறை என்​கின்​றனர்.

இதன்​படி மருத்​து​வர்​கள் வெற்​றிகர​மாக கீதா​வின் வயிற்​றுப் பகு​தி​யில் உள்ள உறுப்​பு​களுக்கு ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்​தனர். பின்​னர் அந்த உறுப்​பு​கள் எடுக்​கப்​பட்டு தான​மாக வழங்​கப்​பட்​டன. இதயம் செயலிழந்த 5 நிமிடத்​துக்கு பிறகு கீதா​வின் உயிர் பிரிந்​து​விட்​டது என்று அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டது.

ஆசி​யா​விலேயே இது​போல் இறந்த பெண்​ணின் உடலுக்கு ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து உறுப்​பு​களை எடுத்த மருத்​துவ நடை​முறை டெல்லி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில்​தான் நடந்​துள்​ளது என்று மணிப்​பால் இன்​ஸ்​டிடியூட்​டின் தீவிர சிகிச்​சைப் பிரி​வின் தலை​வர் ​ஸ்ரீகாந்த் ஸ்ரீனி​வாசன் கூறி​னார்.

இந்​தி​யா​வில் இதயம் இயங்​கி​னாலும், மூளை சாவு அடைந்​தவர்​களின் உடல் உறுப்​பு​கள்​தான் தானம் வழங்​கப்​படு​வது வழக்​கம். ஆனால், இதயம் செயலிழந்து ரத்த ஓட்​டம் நின்ற பிறகு உறுப்​பு​களை பாது​காப்​பது சிக்​கலானது. இதில் நேரம் மிகமிக சிக்​கலானது. ஆனால், என்​ஆர்பி நடை​முறையை பயன்​படுத்தி இதயம் நின்ற பிறகும் உடனடி​யாக ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து அவருடைய கல்​லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்​பு​களை பாது​காத்​தோம் என்று அவர் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, கீதா​வின் உறுப்​பு​களை உடனடி​யாக வேறு நோயாளி​களுக்​குப் பொருத்​து​வதற்​கான ஏற்​பாடு​களை தேசிய உறுப்பு மற்​றும் திசுக்​கள் மாற்று அமைப்பு ஏற்​பாடு செய்​தது. அதன்​படி கீதா​வின் கல்​லீரல் ஐஎல்​பிஎஸ் மருத்​து​வ​மனை​யில் 48 வயது ஆணுக்​கும், 2 சிறுநீரகங்​கள் மேக்ஸ் மருத்​து​வ​மனை​யில் 2 ஆண்​களுக்​கும் பொருத்​தப்​பட்​டன. கீதா​வின் கரு​விழிகள், தோல் கூட தானம் செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து மணிப்​பால் மருத்​து​வ​மனை டாக்​டர் அவி​னாஷ் சேத் கூறும்​போது, ‘‘தற்​போது ஆசி​யா​விலேயே முதல் முறை​யாக ரத்த ஓட்​டத்தை மீண்​டும் கொண்டு வந்து உறுப்​பு​கள் பத்​திர​மாக எடுக்​கப்​பட்​ட​தால், எதிர்​காலத்​தில்​ இறந்​த பிறகும்​ உறுப்​பு தானம்​ வழங்​கு​வது சாத்​தி​ய​மாகும்​’’ என்​று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory