» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)
பொது இடங்களில் சுற்றி திரியும் தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
நம் நாட்டில் தெருநாய்கள் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரையும் விரட்டி விரட்டி கடித்து வருகிறது. இதில் குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்தது.
இதையடுத்து பத்திரிகைகளில் வெளிவந்த தெருநாய்கள் கடித்து இறந்தவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் ரேபிஸ் வழக்குகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. ஜூலை 28 முதல் உச்சநீதிமன்றம் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அதன்படி அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் தெருநாய்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதுமட்டுமின்றி தெருநாய்களை கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்தி கருத்தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்வி அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது பொது இடங்களில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் அருகே சுற்றி வரும் தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். 8 வாரங்களில் வேலி அமைக்க வேண்டும். இங்கு பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்து பிற இடங்களில் விட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)

ஒரே நாளில் 180 விமானங்கள் ரத்து: பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:49:08 PM (IST)

இந்தியாவில் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும்: நிதின் கட்காரி தகவல்
வியாழன் 4, டிசம்பர் 2025 5:33:58 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி: தர்மேந்திர பிரதான்
வியாழன் 4, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)

ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்புமுனை - ராம்நாத் கோவிந்த் பேச்சு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:16:19 AM (IST)









