» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 125 குழந்தைகளுக்கு கண் பாதிப்பு!
வியாழன் 23, அக்டோபர் 2025 10:32:46 AM (IST)
மத்திய பிரதேசத்தில் புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 20-ந்தேதி தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு தீபாவளிக்கும் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதிய ரக தீபாவளி துப்பாக்கி ஒன்று உள்ளூர் சந்தைகளில் விற்பனைக்கு வந்தது.
அந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலக்கும்போது பெரும் வெடி சத்தத்துடன் அசிட்டிலின் என்ற வாயு வெளியாகிறது. இந்நிலையில், இந்த புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் போபால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அசிட்டிலின் வாயுவை சுவாசிக்கும்போது தலைவலி, கண் எரிச்சல் மற்றும் நியாபக மறதி உள்ளிட்ட ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். போபாலில் விற்பனை செய்யப்பட்டது சாதாரண பட்டாசு அல்ல, அது ஒரு ரசாயன வெடிகுண்டு என்று போபால் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் ஹேமலதா யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பட்டாசு விற்பனை சந்தைகளில் அதிரடி சோதனை நடத்தி, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)

ஒரே நாளில் 180 விமானங்கள் ரத்து: பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:49:08 PM (IST)

இந்தியாவில் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும்: நிதின் கட்காரி தகவல்
வியாழன் 4, டிசம்பர் 2025 5:33:58 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி: தர்மேந்திர பிரதான்
வியாழன் 4, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)

ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்புமுனை - ராம்நாத் கோவிந்த் பேச்சு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:16:19 AM (IST)









