» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)
இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ருந்தார். திட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் முர்மு கேரள மாநிலம், நிலக்கல் ஹெலிபேடில் தரையிறங்கி, பின்னர் பம்பாவிலிருந்து சபரிமலைக்கு மலையேற்றப் பாதையில் ஏற இருந்தார்.இதையொட்டி முர்முவின் பயன்பாட்டிற்காக சன்னிதானத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இரண்டு அறைகளை திருவிதாங்கூர் தேவசம் வாரியம் புதுப்பித்திருந்தது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பொது தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால் இந்த நாள்களில் பக்தர்களின் பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி வங்கப்பட்டிருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










