» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

புதன் 12, பிப்ரவரி 2025 11:39:44 AM (IST)

ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திரப் பிரதேச அரசு, குறிப்பாக பெண்களுக்கு "வீட்டிலிருந்து வேலை" (Work From Home) கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Information Technology (IT) and Global Capability Centers policy 4.0.) கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில், "இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்தத் துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறேம். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக உள்ளது. வேலை வீட்டில் செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐ.டி. அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory