» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு!
செவ்வாய் 21, ஜனவரி 2025 12:49:14 PM (IST)
கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்குக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜூனியர் டாக்டராக பணியாற்றி வந்த 31 வயது பெண், கடந்தாண்டு ஆக., 9ல் மருத்துவமனையின் கருத்தரங்க அரங்கில் பிணமாக கிடந்தார்.
கொலை நடந்த மறுதினம், சஞ்சய் ராய் என்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின், குற்றவாளி சஞ்சய் ராய் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் நேற்று (ஜன.,20) நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டாக்டர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆயுள் தண்டனை போதாது. தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இன்று (ஜன.,21) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மே.வங்க அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
'ஏற்கனவே, குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிப்பதே அனைவரது விருப்பம்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1739270422.jpg)
லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:11:04 PM (IST)

இனியாவது மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சி செய்ய வேண்டும்: கனிமொழி எம்பி
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:24:49 PM (IST)

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:08:21 PM (IST)

திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம்: 4 பேர் கைது!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:12:19 AM (IST)

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்: தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால் கருத்து
சனி 8, பிப்ரவரி 2025 9:16:15 PM (IST)

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகம்!
சனி 8, பிப்ரவரி 2025 12:31:40 PM (IST)
