» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தால்...' - பிரியங்கா காந்தியின் முதல் உரை!
வெள்ளி 13, டிசம்பர் 2024 5:02:29 PM (IST)
"கடந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் இந்நேரம் அரசியலமைப்பை மாற்றியிருக்கும்" என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை இன்று நிகழ்த்தினார்.

இதில் பிரியங்கா காந்தி பேசியதாவது: நமது அரசியல் சாசனம் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம். அது நீதி, ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கவசம். ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த பாதுகாப்புக் கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடி நியமனம், தனியார் மயமாக்கலால் இடஒதுக்கீடு முறையை வலுவிழக்கச் செய்கின்றனர். கடந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் இந்நேரம் அரசியலமைப்பை மாற்றியிருக்கும். கடந்த தேர்தலுக்குப் பின்னர்தான் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று பேசி வருகின்றனர். கடந்த காலத்தை பற்றி பேசும் பாஜக, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதை பேச வேண்டும். எல்லாவற்றிற்கும் நேருதான் பொறுப்பா?
அரசியலமைப்பு உருவாக்கத்தில் நீங்கள் எவருடைய பெயரை (நேரு) நீங்கள் சில சமயங்களில் பேசத் தயங்குகிறீர்களோ, அவர் ஹெச்ஏஎல், பெல், செயில், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு உள்ளவர், அவரை நீங்கள் புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும். ஆனால், இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்பியதில் அவரது பங்கை ஒருபோதும் அழிக்க முடியாது.
சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களில் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் மகனின் வயது மற்றவர் அவரைவிடவும் இளையவர். அவர்களின் தந்தை தையல்காரர். அவரது ஒரே விருப்பம் தனது குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பது. அதில் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அவரது இதயத்தில் இந்த கனவும் நம்பிக்கையும் விதைக்கப்பட்டது.
இன்று நாட்டு மக்கள் அனைவரும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அதன் மூலமாக ஒவ்வொருவருடைய நிலைமையையும் அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்க முடியும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1747289815.jpg)
ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!!
வியாழன் 15, மே 2025 11:47:14 AM (IST)

தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பிய ஜனாதிபதி!
வியாழன் 15, மே 2025 10:35:42 AM (IST)

இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
வியாழன் 15, மே 2025 8:45:03 AM (IST)

நமது அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தான் போட்டி போட முடியாது : பிரதமர் மோடி
செவ்வாய் 13, மே 2025 5:43:06 PM (IST)

அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
திங்கள் 12, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)
