» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்பு!

வியாழன் 12, டிசம்பர் 2024 11:58:39 AM (IST)



இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். புதிய ஆளுநராக, வருவாய் செயலாளராக இருந்த சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  3 ஆண்டுகளுக்கு அவர் அப்பதவியில் இருப்பார்.

முன்னதாக மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு வந்த அவரை மூத்த ஊழியர்கள் வரவேற்றனர். ஆவணங்களில் கையெழுத்திட்டு, மல்கோத்ரா பொறுப்பேற்றார். அப்போது, ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள் சுவாமிநாதன், ராஜேஷ்வர் ராவ், ரவிசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory