» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என கூறக்கூடாது: உச்சநீதிமன்றம் அட்வைஸ்!

புதன் 25, செப்டம்பர் 2024 4:17:09 PM (IST)

இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது' என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி உள்ளார்.

அண்மையில் நில உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையிலான பிரச்னை குறித்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி, வேதவியாசாச்சர் ஸ்ரீஷானந்தா விசாரித்தார். அப்போது அவர், பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், பெண் வக்கீல் முகம் சுழிக்கும் விதமான கருத்துக்களையும் கூறியது பெரும் சர்ச்சையானது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதி ஸ்ரீஷானந்தாவை உச்சநீதிமன்ற  நீதிபதி சந்திரசூட் கண்டித்தார். 

இந்நிலையில், இன்று (செப்.,25) நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது கர்நாடகா நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 'இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது. நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் எந்த பிரிவினருக்கும் பாரபட்சம் மற்றும் அவதூறு கருத்துகளை கூறக்கூடாது' என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory