» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உ.பி.யில், பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி : முதல்வர் யோகி இரங்கல்!
செவ்வாய் 17, செப்டம்பர் 2024 12:37:07 PM (IST)
உத்தரப் பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் ஷிகோஹாபாத் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நௌஷேரா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நேற்று இரவு இந்த வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு மற்றம் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழு நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு குடோனில் நடந்த விபத்து குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

வெற்றிகரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:35:58 PM (IST)

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:22:02 PM (IST)

காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 10:18:29 AM (IST)

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)
