» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: ஃபரூக் அப்துல்லா
சனி 17, ஆகஸ்ட் 2024 11:37:57 AM (IST)
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன், ஒமர் அப்துல்லா தேர்தலில் போட்டியிட மாட்டார். மாநில அந்தஸ்து கிடைத்ததும் நான் பதவி விலகுவேன், ஒமர் அப்துல்லா அந்த தொகுதியில் போட்டியிடுவார்" என்றார்.
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி ஜம்மு -காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1747289815.jpg)
ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!!
வியாழன் 15, மே 2025 11:47:14 AM (IST)

தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பிய ஜனாதிபதி!
வியாழன் 15, மே 2025 10:35:42 AM (IST)

இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
வியாழன் 15, மே 2025 8:45:03 AM (IST)

நமது அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தான் போட்டி போட முடியாது : பிரதமர் மோடி
செவ்வாய் 13, மே 2025 5:43:06 PM (IST)

அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
திங்கள் 12, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)
