» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி முறைகேடு: 4 போ் கைது
சனி 17, ஆகஸ்ட் 2024 11:17:32 AM (IST)
கொல்கத்தாவில் சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடா்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கொல்கத்தாவில் உள்ள கோசிபூா் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சாா்ந்த சூதாட்ட செயலிகள் மூலம் பலரை ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
அதில் ஃபைவின் சூதாட்ட செயலி மூலம் முறைகேடாக ஈட்டப்பட்ட ரூ.400 கோடி பணத்தை ‘பைனான்ஸ்’ என்ற சா்வதேச கிரிப்டோ வா்த்தக தளத்தின் மூலம் சீனாவைச் சோ்ந்த நபா்களுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது. அந்த வலைதளத்தின் ஐபி முகவரியை ஆய்வு செய்ததில் அவை சீனாவில் இருந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
டெலிகிராம் செயலியின் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் சீனாவில் இருந்து சிலா் தொடா்புகொண்டுள்ளனா். இந்த நால்வரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1747289815.jpg)
ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!!
வியாழன் 15, மே 2025 11:47:14 AM (IST)

தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பிய ஜனாதிபதி!
வியாழன் 15, மே 2025 10:35:42 AM (IST)

இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
வியாழன் 15, மே 2025 8:45:03 AM (IST)

நமது அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தான் போட்டி போட முடியாது : பிரதமர் மோடி
செவ்வாய் 13, மே 2025 5:43:06 PM (IST)

அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
திங்கள் 12, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)
