» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயற்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

புதன் 10, ஏப்ரல் 2024 12:50:50 PM (IST)

நாசிக்கில், கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வக்கடி கிராமத்தில் நேற்று மாலை, ஒரு பூனை கிணற்றில் விழுந்ததைப் பார்த்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர், பூனையை மீட்க முயன்றுள்ளனர். ஒருவர் கிணற்றில் இறங்கியதும், அவர் விஷ வாயுத் தாக்கி மயங்கியதும், அவரைக் காப்பாற்ற மற்றொருவர் இறங்க இப்படியே ஐந்து பேரும் பலியாகியுள்ளனர். மேலும், ஒரே ஒருவர் மீட்டும் கிராமத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் வந்து, கிணற்றில் விழுந்த உடல்களை மீட்கும் பணியைத் தொடங்கினர். மின்சாரம் இல்லாததால் இப்பகுதியில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. கிணறு முழுக்க சேறு இருந்ததால், சேற்றுக்குள் சிக்கிய உடல்களை மீட்க, மிகப்பெரிய சேறு அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, சேறு அகற்றப்பட்ட பிறகே உடல்களை மீட்க முடிந்ததாகவும், இதனால் உடல்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நடந்ததாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory