» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கணவரின் காதை கடித்து துப்பிய மனைவி: குடும்பத் தகராறில் வெறிச்செயல்
திங்கள் 27, நவம்பர் 2023 5:51:01 PM (IST)
டெல்லியை சேர்ந்த 45 வயதான நபர், மனைவி தனது காதை கடித்து துண்டித்து துப்பியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது: நான் டெல்லியின் புறநகர் பகுதியான சுல்தான்புரியில் வசித்து வருகிறேன். கடந்த 20-ந் தேதி காலையில் நான் வீட்டில் இருந்தேன். அப்போது எந்த காரணமும் இல்லாமல் எனது மனைவி என்னுடன் சண்டை போட்டார்.
அப்போது அவர் என்னிடம், 'நான் குழந்தையுடன் தனியாக வசிக்க விரும்புகிறேன். எனவே வீட்டை விற்று அதில் ஒரு பங்கு பணத்தை தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு நான் மறுத்து விட்டேன். மேலும் அவரை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன். அப்போது எங்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர் என்னை அடிக்க முயன்றார். இதனால் நான் அவரை பிடித்து தள்ளி விட்டேன்.
பின்னர் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றேன். அப்போது அவர் பின்னால் இருந்து என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பின்னர் எனது வலது காதை வேகமாக கடித்தார். நான் வலியால் அலறி துடித்தேன். அப்போதும் அவர் என்னை விடவில்லை. காதை கடித்து தனியாக துண்டித்து துப்பினார். இதனால் எனது வலது காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து எனது மகன் என்னை மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றான். இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி இருந்தார்.
இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் மீது 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வேறு வழிகளில் காயப்படுத்துதல்) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு காதை மீண்டும் ஒட்டவைப்பதற்காக வேறொரு மருத்துவமனையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










